Mai 2, 2024

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு யேர்மனி முழுவதும் வெள்ள அபாய எச்சரிக்கை

யேர்மனியில் பெய்துவரும் கனமழையால் பல மாநிலங்களில் வெள்ள அபாயம் அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

யேர்மனியின் கிழக்குப் பகுதியான சாக்சோனி மற்றும் வடமேற்கில் லோயர் சாக்சனி, அத்துடன் தென்கிழக்கில் பவேரியா மற்றும் மேற்கில் ஹெஸ்ஸி, நோர்ட்-ரைன் வெஸ்ட்பாலியா மற்றும் ரைன்லேண்ட்-பாலடினேட் ஆகியவற்றிற்கான எச்சரிக்கைகளை ஜேர்மன் வானிலை சேவையான (DWD) வெளியிட்டது.

கிறிஸ்மஸ் தினம் வரை தொடர்ந்து மழை நீடிக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் 48 முதல் 96 மணி நேரத்தில் ஒரு சதுர மீட்டருக்கு 100-150 லிட்டர் மழை பெய்யக்கூடும் என்று DWD மேலும் கூறியது.

யேர்மனியும் ஜூன் மாதத்தில் பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.

வெள்ள அபாய எச்சரிக்கை எங்கே வழங்கப்பட்டது?

லோயர் சாக்சனியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 30 அளவீட்டு நிலையங்களில் நான்கு எச்சரிக்கை நிலைகளில் மூன்றாவது மிக உயர்ந்த நிலையை எட்டியது.

வெசர், அலர், லீன் மற்றும் ஓக்கர் உட்பட பல ஆறுகளில் இந்த அளவு வரம்பு மீறப்பட்டன.

யேர்மனியின்  ஹனோவரின் கிழக்கே ரோடன்பெர்க் மாவட்டத்தில் உள்ள மின்மாற்றி நிலையங்களை அவசர சேவைகள் பாதுகாத்துள்ளன.

வெள்ளத்தடுப்பு தடுப்புச்சுவரில் தண்ணீர் பாய்ந்து வருவதாகவும், 25 ஆண்டுகளில் ஒப்பிடக்கூடிய வெள்ளத்தை நகராட்சி காணவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

கிழக்கு மாநிலமான Saxony-Anhalt இன் வெள்ள முன்னறிவிப்பு மையம் Mulde, Aller மற்றும் Havel ஆறுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கெம்னிட்ஸ் நகரம் உட்பட தென்கிழக்கு மாநிலமான சாக்சோனியின் சில பகுதிகளில் எச்சரிக்கை 3 அடைந்தது.

டார்ட்மண்ட், எசன், டுயிஸ்பர்க் மற்றும் போச்சம் நகரங்களை உள்ளடக்கிய ரூர் பள்ளத்தாக்கு பகுதியில், கனமழையால் தொடருந்துப் பாதைகளில் இடையூறு ஏற்பட்டது.

நேற்று சனிக்கிழமையன்று, நோட் – ரைன் வெஸ்ட்பாலியாவில் வெள்ளம் சூழ்ந்த புறநகர்ப் பகுதியான Münster இல், தீயணைப்பு வீரர்கள் காரில் சிக்கியிருந்த ஒரு பெண்ணை மீட்டனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert