Mai 7, 2024

அமெரிக்காவுக்கு போர்க்குற்ற ஆதாரங்களை வழங்கிய சிறிலங்கா தலை

தாமும் தமது குடும்பத்தினரும் நாட்டுக்குள் நுழைவதற்கு தடை விதித்த அமெரிக்காவின் முடிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக முன்னாள் கடற்படைத் தளபதியும் வடமேல் மாகாண ஆளுநருமான வசந்த கரன்னாகொட தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த நடவடிக்கையின் பின்னணியில் ‚வேறு ஏதோ ஒன்று‘ இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கை குறித்து தமக்கு சில சந்தேகங்கள் உள்ளன, இதன் பின்னணியில் வேறு ஏதோ இருப்பதாக தாம் நம்புவதாகவும் வசந்த கரன்னாகொட குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் முடிந்து 14 வருடங்களின் பின்னர் திடீரென அமெரிக்கா தீர்மானம் எடுத்தது எனக்கு ஆச்சரியமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையின் பின்னணியில் சிறிலங்காவின் முன்னாள் இராணுவ அதிகாரி மற்றும் அமெரிக்க தூதுவர் ஆகியோர் இருப்பதாக தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் ஆவணப்படுத்தப்பட்ட தகவல்கள் மற்றும் பிற விசாரணைகள் தனக்கு எதிராக தடையை விதிக்க காரணங்கள் என்றும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் அறிக்கைகளை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் பரிந்துரைப்பது வெட்கக்கேடானது என்றும் அவர் கூறியுள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert