Mai 4, 2024

தமிழர் நிலங்களை அபகரிக்கும் ஒட்டுக்குழு டக்ளஸ்.

சிங்கள பேரினவாத  அரசின் கடற்தொழில் அமைச்சரின் (ஒட்டுக்குழு  டக்ளஸ் தேவானந்தா ) பினாமியின் நிறுவனத்திற்காக பூநகரி கெளதாரிமுனையில் மக்களின் காணிகள் பலவந்தமாக அபகரிக்கப்படுகின்றன.

கிட்டத்தட்ட 100 ஏக்கர் காணியினை டக்ளஸ் தேவானந்தாவின் பினாமியின் நிறுவனங்களான கனிரா சீ பூட் மற்றும் நோர்த் சீ பூட் பார்ம் ஆகிய நிறுவனங்கள் இறால் பண்ணை வைப்பதற்காக குறித்த காணிகள் அளவை செய்யப்படுகின்றது.

பினாமிகளின் பெயரில் தமிழர் தாயகங்களில் உள்ள எமது மக்களின் காணிகளையே அபரிக்கும் டக்ளஸ் தேவானந்தாவால்  எவ்வாறு தமிழர் நிலங்களில் நடைபெறும் பேரினவாத அத்துமீறல்களை தடுக்க முடியும்.

தமிழர் தாயகங்களில்  சிங்கள பேரினவாத தொல்பொருள் திணைக்களம் நடத்துகின்ற கெடுபிடிகளை தடுப்பதற்கு டக்ளஸ் தேவானந்தா  ஒரு துளி முயற்சியும் எடுக்கவில்லை.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert