Mai 9, 2024

பங்களாதேஷில் பெரும் தீ விபத்து: ஆடைச் சந்தை எரிந்து சாம்பலானது!

பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் உள்ள 3,000 கடைகளைக் கொண்ட பிரபலமான ஆடை சந்தையில் ஏற்பட்ட பெரும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்களும் இராணுவ வீரர்களும் பணியாற்றி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று செவ்வாய்க்கிழமை காலை 6:10 மணிக்கு (12:10 GMT) டாக்காவில் உள்ள பங்கபஜார் சந்தையில் தீ பரவியது. ஆனால் உடனடியாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று உள்ளூர் தீயணைப்பு சேவை அதிகாரி ரஃபி அல் ஃபரூக் தெரிவித்தார்.

47 அலகுகளைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் பாரிய தீயை அணைக்க பணிபுரிந்து வருவதாகவும், இது நகரத்தின் பழமையான சுற்றுப்புறங்களை கருப்பு புகையால் மூடியது என்றும் அவர் கூறினார்.

எந்தவொரு உயிரிழப்பு குறித்தும் எங்களிடம் உடனடி அறிக்கைகள் இல்லை என்று அவர் கூறினார்.

ஆனால் கடை உரிமையாளர்களும் தீயணைப்பு அதிகாரிகளும் செய்தியாளர்களிடம் பங்காபஜார் சந்தை மற்றும் மூன்று அருகிலுள்ள வணிக வளாகங்கள் கிட்டத்தட்ட முற்றிலும் அழிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

மற்றொரு தீயணைப்பு சேவை அதிகாரி அன்வருல் இஸ்லாம் கூறுகையில்,  தீ எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை என்றார்.

சுமார் 600 தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று தீயணைப்பு துறை செய்தி தொடர்பாளர் ரகிபுல் இஸ்லாம் தெரிவித்தார்.

தீயை அணைக்கும் பணியில் விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்று இணைந்துள்ளதாக இராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஹெலிகாப்டரில் இருந்து வான்வழி காட்சிகள் அருகிலுள்ள மேம்பாலத்தில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் தீயைப் பார்ப்பதைக் காட்டியது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert