April 26, 2024

கிளிநோச்சியில் முன்னனியின் ஊர்தி

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்தி நேற்று மன்னாரிலிருந்து கிளிநொச்சி வந்தடைந்தது. இன்று காலை டிப்போ சந்தியில் விளக்கேற்றப்பட்டு அஞ்சலிகளின் பின்னர் கிளிநொச்சி சேவைச்சந்தை உள்ளிட்ட பகுதிகளிற்கு சென்று அஞ்சலிக்கப்பட்டது. அத்துடன் முள்ளிவாய்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது.

அத்துடன் இன்றே பரந்தன் ஊடாக முல்லைதீவு முள்ளிவாய்க்காலைச் சென்றடையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert