Mai 8, 2024

பிரத்யேக மாத்திரை கொரோனாவை குணப்படுத மாத்திரை விற்பனை!

கொரோனா தொற்றுக்கு எதிராக உலக நாடுகளில் ஏராளமான தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பிறகு அதற்கு சிகிச்சை அளிக்க பிரத்யேக மாத்திரை எதுவும் இதுவரை எந்த நாட்டிலும் அங்கீகரிக்கப்படவில்லை.

இந்நிலையில் அமெரிக்காவின் மெர்க்ஸ் நிறுவனம் கொரோனாவை குணப்படுத்தும் ‘மால்னுபிரவிர்’ மாத்திரையை தயாரித்துள்ளது. மால்னுபிரவிர் மாத்திரையின் தரவு மற்றும் ஆய்வு முடிவுகளை அமெரிக்காவின் உணவு, மருந்து நிர்வாகத்திடம் சமர்ப்பித்து அனுமதிக்கு விண்ணப்பித்திருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இம்மாத்திரையை தற்போது அவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்த பிரிட்டனின் மருந்து சுகாதார பொருட்கள் ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. ‘இது பிரிட்டனுக்கு வரலாற்றில் முக்கியமான நாள். உலகின் முதல் நாடாக கொரோனா மாத்திரைக்கு அனுமதி அளித்துள்ளோம்’ என பிரிட்டன் சுகாதார துறை செயலர் சஜித் தெரிவித்துள்ளார்.

18 வயதுக்கு மேற்பட்டவர்களில் கொரோனா பாதிப்பு உறுதியானவுடன் அல்லது அறிகுறி தோன்றியவுடன் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு தினம் இரண்டு வேளையாக இம்மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.