Mai 9, 2024

துயர் பகிர்தல் வைரவிப்பிள்ளை ஞானப்பூங்கோதை

சரசாலை ஞானக்கா ரீச்சர் காலமானார்
சரசாலை தெற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வைரவிப்பிள்ளை ஞானப்பூங்கோதை அவர்கள் (இளைப்பாறிய ஆசிரியை, சரசாலை சரஸ்வதி வித்தியாலயம்) இன்று 23.06.2021 காலை சரசாலை தெற்கில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்
அன்னார் அமரர் வைரவிப்பிள்ளை (முன்னாள் அதிபர், சரசாலை சரஸ்வதி வித்தியாசாலை) அவர்களின் அன்பு மனைவியும்
அமரர் க. மகேஸ்வரன் (முன்னாள் அதிபர் சாவகச்சேரி இந்துக் கல்லூரி) அமரர் ஞானசௌந்தரி கந்தையா (அச்சுவேலி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்
சரோஜாதேவி ஜெகதீஜ்வரன் (கனடா) சர்வேஸ்வரி இராஜேந்திரம் (மலேசியா) சத்தியவதி ரவிக்குமார் (ஆசிரியை மட்டுவில் சந்திரமௌலீச வித்தியாலயம்) சிவகுமாரன் (Director of Data Analytics, லண்டன்) விஜயகுமாரன் (அதிபர், வரணி வடக்கு சைவப்பிரகாச வித்தியாலயம் – செயலாளர் சரசாலை வீரமாகாளி கோவில்) நந்தகுமாரன் (கணினி தொழினுட்ப உத்தியோகத்தர் சம்பத் வங்கி) ஆகியோரின் அன்புத் தயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (புதன்) பிற்பகல் 3.30 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று (சரசாலை சரஸ்வதி வித்தியாசாலை அருகில்) பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக பிற்பகல் 5.30 மணிக்கு வேம்பிராய் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
அன்னாரின் ஆன்மா சரசாலை இலந்தைத்திடல் ஸ்ரீ வீரமாகாளி அம்பாளின் திருவடிகளைச் சேரப் பிரார்த்திக்கின்றோம்.