Mai 10, 2024

தென்மராட்சியில்இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினரால் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது


இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினரால் (slrc)இன்றைய தினம் சாவகச்சேரி பிரதேச செயலகம் ,சாவகச்சேரி நீதிமன்றம் ,சாவகச்சேரி மத்திய பேருந்து நிலையம் கொடிகாமம் சந்தை ஆகிய பகுதிகளில் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டதோடு கொரோனா தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டது

கொரோனா தொற்று அபாய சூழ்நிலையில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினரால் யாழ் மாவட்டத்தில்பல்வேறுபட்ட கொரோனா விழிப்புணர்வு செயற்பாடுகள் மற்றும் கிருமி தொற்று நீக்கம் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினம் தென்மராட்சிப் பிரதேசத்தில் குறித்த கொரோனாதொடர்பான விழிப்புணர்வு மற்றும் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது

குறித்த செயற்பாட்டின்போது செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ் மாவட்ட கிளையின் இணைப்பாளர் மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்