Mai 2, 2024

நான் சொன்னாலே உண்மை:மாவை!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவு, திட்டமிட்டவாறு எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறும் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவு எதிர்வரும் 21 ஆம் திகதி திருகோணமலையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சீ.யோகேஸ்வரன ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

இந்நிலையில், தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் கூட்ட ஆவணங்களில் அவர் கையெழுத்திட முடியாத சூழல் எழுந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதனால் கூட்டத்துக்கான அழைப்பு கடிதங்கள் இதுவரை உறுப்பினர்களுக்கு அனுப்பப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் இலங்கை தமிழரசு கட்சியின் தலைமை தெரிவு திட்டமிட்ட திகதியில் நடைபெறாது என செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் கட்சியின் தலைவர் தெரிவு ஒத்திவைக்கப்படுமானால் கட்சியின் தலைவர் மற்றும் செயலாளரின் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் அதுவரை வெளியாகும் போலியான செய்திகளை நம்ப வேண்டாம் என மாவை சேனாதிராசா கேட்டுக்கொண்டுள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert