Mai 17, 2024

சந்திப்பிற்கு முன்னர் பிணை!

மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில்   மாவீரர் தினமான நவம்பர் 27ஆம் திகதியன்று இடம்பெற்ற  அஞ்சலி நிகழ்வுகளில் கலந்துகொண்டபோது கைதுசெய்யப்பட்ட நான்கு பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

23 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான 2 சரீர பிணையில்,   வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுதலை   செய்யப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் ஜனவரி மாதம் உயர்தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவன் உட்பட நான்கு பேர்   பிணையில் செவ்வாய்க்கிழமை (19) விடுக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நால்வருக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இலங்கை காவல்துறையினரால்; வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் அவர்களது விடுதலை தொடர்பில் ஆரம்பம் முதல் இறுதி வரை   மட்டக்களப்பு மாவட்ட சிவில்  அமைப்புக்கள்  நடவடிக்கையில் ஈடுபட்டன.

வழக்கு ஜனவரி 1ஆம் திகதி  மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள  திகதி குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே இலங்கை ஜனாதிபதி எதிர்வரும் 21ம் திகதி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கவுள்ள நிலையில் கைதுகள் தொடர்பில் பேசவுள்ளதாக தமிழ் தரப்புக்களிலிருந்து அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert