Mai 20, 2024

யாழில். 69 ஆயிரம் பேருக்கு குடிநீர் இல்லை

யாழ்ப்பாணத்தில் 69,113 பேருக்கு குடிநீர் இல்லமால் அல்லல்படுகின்றனர் என யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார். 

யாழ்.மாவட்டத்தில் உள்ள நெடுந்தீவு , ஊர்காவற்துறை , சாவகச்சேரி மற்றும் மருதங்கேணி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 21 ஆயிரத்து , 714 குடும்பங்களை சேர்ந்த 69 ஆயிரத்து 113 பேர் குடிநீர் இல்லாமல் அல்லல்பட்டு வரும் நிலையில் குறித்த பிரதேச செயலர்களின் கோரிக்கைக்கு அமைவாக அப்பகுதி மக்களுக்கான குடிநீர் விநியோகத்தை முன்னெடுத்துள்ளோம் என மேலும் தெரிவித்தார். 

அதேவேளை யாழில் எதிர்வரும் ஓரிரு நாட்களில் மழை பெய்யா விடின் நிலைமை மேலும் மோசமாகும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert