Mai 3, 2024

கொழும்பில் சுற்றிச் வட்டமிடும் ஹெலிகொப்டர்கள்!!

 

கொழும்பின் சில பகுதிகளில் சிறிலங்கா விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர்கள் மற்றும் ட்ரோன் கமராக்கள் பறக்கவிடப்பட்டுள்ளது.

கொழும்பில் ஏற்படும் வாகன நெரிசல் குறித்து ஆராயவே விமானப்படையினர் இந்தச் சிறப்பு நடவடிக்கையினை மேற்கொண்டதாக தெரிய வருகிறது.

தாமரைத் தடாக சந்தி, ஆயுர்வேத சுற்றுவட்டம், தியத்த உயன பகுதி, பஞ்சிகஹவத்தை பகுதி, களனி புதிய பாலம் மற்றும் நாடாளுமன்றத்தை அண்மித்த பகுதிகள் ஆகியன இன்று கண்காணிக்கப்பட்டதாக விமானப்படை குறிப்பிடுகின்றது.