Mai 6, 2024

துயர் பகிர்தல் அம்பலவாணர் யோகேந்திரன்

திரு. அம்பலவாணர் யோகேந்திரன்

(ஓய்வுபெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர்)

தோற்றம்: 01 பெப்ரவரி 1949 – மறைவு: 20 ஜூன் 2021

யாழ். வடமராட்சி கரணவாய் வடக்கு நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் யோகேந்திரன் அவர்கள் 20-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அம்பலவாணர், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கந்தசாமி, ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி (ஓய்வுபெற்ற தட்டெழுத்தாளர்) அவர்களின் அன்புக் கணவரும்,

மீரா (பிரித்தானியா), சுஜா (வைத்தியர்), பிரகாஷ் (ஐக்கிய அமெரிக்கா), பிரஷணா (வைத்தியர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவகுமார் (பிரித்தானியா), பரிமளேந்திரன் (வைத்திய நிபுணர்), காயத்திரி (ஐக்கிய அமெரிக்கா), ரிதாஞ்சனா (வைத்தியர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அபினா, விதுன், ஷிவாத்மிகா, வன்ஷிகா, திக்‌ஷிகா, அபிஷிகா, அஷ்மிதா, ஹரிணி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

யோகாம்பிகை (ஐக்கிய அமெரிக்கா), இராசாம்பிகை (அவுஸ்திரேலியா), புனிதாம்பிகை (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராசையா, காலஞ்சென்ற பாலகிருஷ்ணன், இந்திராகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 23-06-2021 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணி முதல் பி.ப 06:00 மணி வரை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து 24-06-2021 வியாழக்கிழமை அன்று குடும்ப உறுப்பினர்களுடன் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
குடும்பத்தினர் – உறவினர்Mobile : +94 77 538 5100