Mai 8, 2024

இறந்தும் ஆறு பேரை வாழவைக்கும் ஆசிரியை; நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

டெல்லியில் மூளைச்சாவு அடைந்த நிலையில் உயிரிழந்த ஆசிரியர் ஒருவது உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானமாக அளிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஐ. அரபு எமிரேட்ஸில் உள்ள பாடசாலை ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் சையத் ரபாத் பர்வீன் (வயது 41). இவருக்கு திருமணமாகி 11 மற்றும் 18 வயதுடைய 2 மகன்கள் டெல்லியில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் எமிரேட்ஸில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் குளிர்கால விடுமுறைக்காக டெல்லி சென்ற அவருக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து நரம்பியல் நிபுணராக பணியாற்றி வரும் தனது மைத்துனரான டாக்டர் அன்வர் ஆலம் என்பவரிடம் சென்று அவர் தனது உடல்நிலையை பரிசோதித்தார்.

அப்போது அவருக்கு சி.டி. ஸ்கேன் எடுக்கப்பட்டதில் அனெரிசம் எனப்படும் மூளையில் உள்ள ரத்தநாளம் வீங்கி வெடிக்கும் நிலையில் உள்ளதை டாக்டர்கள் கண்டறிந்தனர்.

உடனடியாக குறித்த ஆசிரியை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பிறகு அவரது உடல்நிலை மோசமான நிலையில் வென்டிலேட்டரில் அவருக்கு செயற்கை சுவாசம் தரப்பட்டது.

எனினும் கோமா நிலைக்கு சென்ற அவரை கடந்த டிசம்பர் 24ஆம் திக மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் அறிவித்தனர்.

அதன் பிறகு அவரது குடும்பத்தினர் அனுமதியுடன் அவரது உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டது. 2 கண்நோயாளிகள் உள்ளிட்ட 6 பேர் அவரது உறுப்புகளால் மறுவாழ்வு அடைந்துள்ளனர்.

இதேவேளை இறந்தும் 6 பேரை வாழ வைத்ததாக அமீரக சமூக ஊடகங்களில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.