Mai 9, 2024

சாட்சியங்களின் அறிக்கைகளை தமக்கு வழங்குமாறு சட்டமா அதிபர் கோரியுள்ளார்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் இதுவரை பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களின் அறிக்கைகளை தமக்கு வழங்குமாறு சட்டமா அதிபர் கோரியுள்ளார்.

சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவரிடம், சட்ட மா அதிபர் இவ்வாறு கோரியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கையை தயார் செய்யும் வகையிலே சட்ட மா அதிபர் குறித்த அறிக்கைகளை கோரியுள்ளதாக ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.