யாழ் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து வீடுகளில் கோழி இறைச்சி விற்க தடை என இன்றையதினம் தீர்மானம்!

யாழ் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து வீடுகளில் கோழி இறைச்சி விற்க தடை என இன்றையதினம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து வீடுகளில் கோழி இறைச்சி விற்பது தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி விற்பனையில் ஈடுபடுவோருக்கு சட்ட நடவடிக்கை எடுப்பதாக இன்றையதினம் தீர்மானிக்கப்பட்டது

யாழ்ப்பாண மாநகர சபையின் மாதாந்த கூட்டம் முதல்வர் தலைமையில் ஆரம்பமாகி இடம்பெற்றபோது குறித்த விடயம் தொடர்பில் பரிசீலிக்க பட்டதோடு இறுதியில் யாழ்ப்பாண முதல்வரின் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .

மேலும் யாழ்ப்பாணம் மாநகர சபையில் சாரதிகள் மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்கள்  பலர் தவறான நடவடிக்கையில் ஈடு பட்டமைக்கான விசாரணைகள் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது  அதற்கு ஆணையாளரால் பதிலும் வழங்கப்பட்டது