பலாலி வடக்கு J/254 அன்ரனிபுரமும் முடக்கம்?
![](https://eelattamilan.stsstudio.com/wp-content/uploads/2020/10/jaffna-28.jpg)
அந்தியேட்டி வைபவத்தில் கலந்து கொண்டவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிகண்டியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு (28) நேற்றைய தினம் கொரோனா தொற்று ஏற்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவரிடம் நடாத்திய விசாரணையில் கடந்த 24 ம் திகதி பலாலி வடக்கு J/254 அன்ரனிபுரத்தில் நடைபெற்ற அந்தியேட்டி வைபவதற்கு சென்று வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அந்தியேட்டி வைபவத்தில் கலந்து கொண்டவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன் பொலிகண்டி பகுதியில் அவரைச் சூழவுள்ள 4 வீடுகளும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை – மயிலிட்டி – கீரிமலை வழித்தட பயணிகளுக்கு….
கொரோனா தொற்றாளர் பேலியகொட மீன் சந்தையிலிருந்து வந்த பின்னர் சென்ற இடங்கள்
21/10/2020- பருத்தித்துறை – ஜெயாஸ் தையலகம் (மத்திய சந்தைத்தொகுதி) சேட் தைப்பதற்கு மற்றும் பருத்தித்துறை பஸ் நிலைய பகுதி
22/10/2020-பருத்தித்துறை ஜெயாஸ் ரெக்ஸ்
23/10/2020 பலாலிவடக்கு அன்ரனிபுரம்
ஞானப்பிரகாசம் ஞானமணி என்பவருடைய இறுதிக்கிரியை நிகழ்வு
அவரது தாய் தந்தை சென்று வந்த இடங்கள்
1- 22/10/2020 – பருத்தித்துறை – கீரிமலை பேருந்தில் மாலை 3.30 மணிக்கு
பொலிகண்டியில் இருந்து – பலாலிக்கு
2-24/10/2020-கீரிமலை – பருத்தித்துறை பேருந்தில் பலாலியிலிருந்து பொலிகண்டி பகுதிக்கு பகல் – 6.30 க்கு
குறித்த வழித்தடத்தில் பயணித்தவர்கள் மற்றும் அந்தந்த இடங்களுக்கு சென்றவர்கள் உடனடியாக உங்கள் உங்கள் பகுதி சுகாதார பரிசோதகரிடம் தகவலை தெரியப்படுத்தவும்.
பருத்தித்துறை ஜெயராஜ் தையலகம் மூடப்பட்டுள்ளதுடன், அங்கு பணிபுரிந்த வேலையாட்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.