மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா முனைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் 89வது பிறந்தநாள்!

இந்தியாவின், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா முனைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் 89வது பிறந்தநாள் இன்று (ஒக்டோபர் 15, 2020), யாழ்ப்பாண பொது நூலகத்தில் உள்ள “இந்தியா கார்னரில்” அவரது திருவுருவச்சிலைக்கு இந்தியத் துணைத் தூதுவர் பாலச்சந்திரன் அவர்களால் மலர்மாலை அணிவித்தும், மலர் தூவியும் கொண்டாடப்பட்டது.

தூதரக அலுவலர்கள், தலைமை நூலகர், நூலக அலுவலர்கள் மற்றும் நூலக வாசகர்களும் அவருடன் இணைந்து மலர் தூவி கொண்டாடினர் .