Mai 4, 2024

மட்டக்களப்பில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி!

இந்திய-இலங்கை அரசுகளிடம் நீதி கேட்டு, ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உணவு ஒறுப்பிருந்து உயிர் துறந்த தியாகி திலீபனின் 33ஆம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்நிலையில், மட்டக்களப்பு கல்லடி விஷ்ணு ஆலயத்தில் மட்டக்களப்பு இளைஞர்களால் தியாகி திலீபனுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் அடையாள உணவுத் தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தியாகி திலீபனின் நினைகூரல் நிகழ்வுகளுக்கு தமிழர் தாயகத்தில் இம்முறை பொலிஸாரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.