April 26, 2024

சண்டித்தனத்தில் தவிசாளர்?

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்குள் உள்ள சேவைச் சந்தியில் உள்ள 38 மரக்கறி கடைகளுக்கு நேற்று (24) இரவோடு இரவாக கரைச்சிப் பிரதேச சபையினரால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச சபையின் செயலாளரின் ஒப்பத்துடன் 38 வியாபார நிலையங்களுக்கு முன்பாகவும் கடைகள் பூட்டப்பட்டுள்ளன என அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.