April 19, 2024

யாழில் பண்டாரவன்னியனிற்கு நினைவேந்தல்!

பண்டார வன்னியனின் வெற்றி நாள் நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

யாழ்.நகரிலுள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் மற்றும் ஆதரவாளர்கள் சகிதம் மாலை அணிவித்து நினைவுகூர்ந்தார்.

வன்னியின் இறுதி மன்னன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு கோட்டையை ஆங்கிலேயரிடமிருந்து மீட்டெடுத்த 217 ஆவது ஆண்டு நிறைவு நாள் இன்றாகும்.