Mai 6, 2024

ஸ்கொட்லாந்து விடுதியில் கத்திக்குத்து! மூவர் பலி!

பிரித்தானியாவில் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் மேற்கு ஜார்ஜ் வீதியில் அமைந்துள்ள ஒரு சொகுசு விடுதிக்குள் திடீரென்று கத்தியுடன் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கு இருந்தவர்கள் மீது கத்தியால் குத்தியுள்ளார்.

இத்தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதனால், அங்கிருந்தவர்கள் அனைவரும் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்ற காவல்துறையினர் தாக்குதலாளிய சுட்டுக்கொன்றனர்.
இந்த சம்பவத்தில் காவல்துறையினர் சிலரும் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.