April 28, 2024

துயர் பகிர்தல் சுப்பையா பரமேஸ்வரி

யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதியை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா பரமேஸ்வரி அவர்கள் 18-06-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகேசு, சின்னதங்கச்சி தம்பதிகளின் அன்பு மகளும், கணபதிப்பிள்ளை இராமாசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுப்பையா அவர்களின் அன்பு மனைவியும்,

சுபாகரன்(பிரான்ஸ்), சுபாஜினி(சுவிஸ்), சுபந்தினி(வட்டக்கச்சி கிளிநொச்சி), சுதர்சினி(கிளிநொச்சி), க. சுதாசினி(இத்தாலி), சுசிலாதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

இராஜேஸ்வரி, காலஞ்சென்ற இராஜேந்திரம், நிமலேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ரவிசா(பிரான்ஸ்), புவனேஸ்வரன்(சுவிஸ்), புஸ்பகரன்(வட்டக்கச்சி கிளிநொச்சி), முகுந்தன்(பரந்தாமன் பல்பொருள் வாணிபம்- கிளிநொச்சி), சிறிகரன்(இத்தாலி), சுந்தர் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பத்மநாதன், திருவாசநாதர், காலஞ்சென்ற சுப்பிரமணியம், இரவிக்குமார், பரிமளாதேவி, விமலாதேவி, வசந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிஷாந், சுஜந்தி, ஹரினி, ஜதிசன், துஸ்யந்தன், திரிசா, தரணிகன், ஜெனராம், சுகிராம், நவிந், ரதன், ராம், ரவின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-06-2020 வெள்ளிக்கிழமை அன்று திருநகர் கிளிநொச்சியில் உள்ள அவரது மகள் முகுந்தன் சுதாசினி இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுப்பையா – கணவர்

சுபாகரன் – மகன்

சுபாஜினி – மகள்

சுதாசினி – மகள்

சுபந்தினி – மகள்

சுதர்சினி – மகள்

முகுந்தன்(பரந்தாமன் பல்பொருள் வாணிபம்) – மருமகன்