Mai 3, 2024

லண்டனில் இத்தனை விஞ்ஞானிகள் அரசுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை என்ன தெரியுமா ?

லண்டனில் சுமார் 27 விஞ்ஞானிகள் கூட்டாக இணைந்து பிரித்தானிய அரசுக்கு கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்கள். கொரோனா வைரசின் 2ம் அலை இந்த குளிர்காலத்தில் மீண்டும் ஆரம்பமாகும் என்பது தான் அது. எனவே முன்னர் போல அரசாங்கம் எந்த ஒரு ஆயத்தமும் இன்றி இருக்க வேண்டாம் என்றும். 2ம் கட்ட கொரோனா அலைக்கு தயாராக இருக்கும் படியும் இவர்கள் நேற்று(06) கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்கள்.

இதனை பிரித்தானிய அரசு செவிமடுக்கிறதா என்பது ஒரு புறம் இருக்க. ஏன் இவர்கள் இந்த குளிர் காலத்தை குறிப்பாக சொல்கிறார்கள் என்பது மர்மமாக உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தாக்கம் குறைவடைந்து வரும் நிலையில். ஜூன் மற்றும் ஜூலை மாதங்கள் கழிந்தால், சுற்றுலாப் பயணிகள் வருவது கூட, குளிர் காலத்தில் குறைந்துவிடும். ஆனால் இவர்கள் எந்த கணக்கை வைத்துக் கொண்டு இவ்வாறு கூறுகிறார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது.

இருப்பினும் குறித்த 27 விஞ்ஞானிகளை அவ்வளவு சுலபமாக எடை போட்டுவிடவும் முடியாது. எனவே அனைவரும் பாதிகாப்பாக இருப்போம்.