Mai 9, 2024

Monat: März 2024

மனிதனுக்கு பன்றியின் சிறுநீரகம் மாற்றப்பட்டுச் சாதனை!!

மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை அறுவைச் சிகிற்சை மூலம் 62 வயதுடைய மனிதனுக்கு மாற்றியுள்ளனர் அமெரிக்க நிபுணர்கள். மார்ச் 16 அன்று மேற்கொள்ளப்பட்ட நான்கு மணி நேர...

காசாவில் போர் நிறுத்தம்: அமெரிக்காவின் தீர்மானத்தை ரஷ்யாவும் சீனாவும் வீட்டோ செய்தன!!

காசாவில் உடனடியாக போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற அமெரிக்க கொண்டு வந்த தீர்மானத்தை ரஷ்யாவும் சீனாவும் வீட்டோ செய்து தடுத்துள்ளன. பணயக்கைதிகள் உடன்படிக்கையுடன் பிணைக்கப்பட்ட காசாவில் போர்நிறுத்தத்திற்கு...

யாழில். நான்கு நாட்களாக தொடர்ந்த உணவு தவிர்ப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது

இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட மீனவர்கள் முன்னெடுத்திருந்த உணவு தவிர்ப்பு போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. யாழ் மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புக்களின் சம்மேளனமும்,...

ஜனாதிபதி யாழ்.வந்து சென்ற செலவு 11 இலட்ச ரூபாய்

ஜனாதிபதி கடந்த ஜனவரி மாதம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட வேளை அவருக்காக 11 இலட்சத்து , 24 ஆயிரத்து , 808 ரூபாய் பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும் ,...

காந்தி தேசமே உன் நீதி எங்கே ? யாழில் மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்

இந்திய மீன்பிடியாளர்களது எல்லைதாண்டிய அத்துமீறும் செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட மீனவர்கள் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இன்றைய தினம் வியாழக்கிழமை மூன்றாவது நாளாகவும் தொடர்கின்ற நிலையில்...

நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆளும் தரப்பே முன்வைத்திருக்க வேண்டும்

தற்போதைய சபாநாயகருக்கு எதிராக ஆளுந்தரப்பினராலேயே நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைத்திருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த...

இந்திய எதிர்ப்பு வருத்தம் முற்றுகிறது!

இந்திய அரசிற்கெதிராக மனோநிலை தெற்கு வடக்கு பாகுபாடின்றி இலங்கையில் உச்சமடைந்துள்ளது. இந்திய மீனவர்களது அத்துமீறல்களிற்கு எதிராக யாழ். மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ் மாவட்ட...

வெங்காயம்:சீனாவிடம் சரண்!

 இலங்கையில் சாதாரண மக்களிடையே அன்றாடம் ஆட்டிப்படைத்துவரும் வெங்காயப்பிரச்சினையில் இந்தியா கைவிட்டுள்ள நிலையில் அரசு சீனாவிடம்  கையேந்தியுள்ளது. சீனாவிடம் முன்பதிவு செய்யப்பட்ட பெரிய வெங்காயம் இன்னும் ஐந்து நாட்களில்...

தமிழர் தாயகத்தில் பெளத்தமயமாக்கலை முன்னெடுக்க உதவ வேண்டாம்

தமிழ் கலாசார இனவழிப்புக்காக பெளத்தமயமாக்கலை ஆயுதமாக்குதல்!!தமிழர் தாயகத்தில் பெளத்தமயமாக்கலை முன்னெடுக்க உதவ வேண்டாம்இந்துக்களின் சிறப்பு மிக்க புனித நாளான மகா சிவராத்திரியன்று வவுனியா மாவட்டத்திலுள்ள வெடுக்குநாரி இந்து ஆலயத்தில் தமிழ்ப் பக்தர்கள் மீது சிறீலங்கா பொலிஸ் வன்முறையை இம்மாதம் எட்டாம் திகதி கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஆலயம் அமைந்துள்ள வடகிழக்கானது வரலாற்று ரீதியாக இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களான தமிழர்களின் தாயக பிரதேசம் ஆகும். சிறீலங்கா பொலிஸானது எட்டுப் பேரைக் கைது செய்துள்ளதுதலைமுறைகளாக தமிழ்ப் பக்தர்களின் வழிபாட்டிடமாக வெடுக்குநாறி இந்து ஆலயம் இருந்து வருகின்றது. சிறீலங்கா தேசத்தின் நடவடிக்கையானது அடிப்படை உரிமையொன்றான இந்துக்களின் வழிபாடு செய்யும் உரிமையை மிக மோசமாக மீறுகிறது. “பக்தர்களின் கைதை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வன்மையாக கண்டிக்கிறது. பெளத்தத்த மதத்தை பலப்படுத்துவதற்காக சிறீலங்காவுக்கு வழங்கப்பட்ட எந்தவொரு நிதியும் இந்து மதத்தையும் , ஏனைய மதங்களையும் நலிவற்றத்தாக்குவதற்கு பயன்படுத்தப்படக்கூடாது என உறுதிமொழி வழங்குமாறு இந்திய அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம்” என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.தொல்லியல் அடையாளங்களை பாதுகாத்தல் என்ற போர்வையின் கீழ் தமிழ் அடையாளங்களை அழித்தலில் யுத்தத்தின் பின்னர் சிறீலங்கா அரசானது களமிறங்கியுள்ளது. தொல்லியல் சட்டமானது எந்தவொரு வரலாறு, சமூக மற்றும விஞ்ஞான ஆராய்ச்சி இல்லாமல் எந்தவொரு இடத்தையும் தொல்லியல் தளமாகப் பிரகடனப்படுத்த தொல்லியலுக்கு பொறுப்பாகவுள்ள அமைச்சருக்கு அதிகாரத்தை வழங்குகிறது. வரலாற்று ரீதியிலான தமிழர் தாயகமான சிறீலங்காவின் வடகிழக்கு பகுதியில் ஏறத்தாழ 1,500 இடங்களை பெளத்த இடங்களாக அடையாளப்படுத்த சிங்கள பெளத்த பேரினவாதம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. தமிழர் தாயகத்தில் 1970களில் இவ்வாறான ஏறத்தாழ 2,000 நிலையங்களை அடையாளங்காண சிங்கள பேரினவாதி அமைச்சர் சிரில் மத்தியூ திட்டமிட்டிருந்ததை நாங்கள் ஞாபகப்படுத்த விரும்புகிறோம்.தமிழர் பகுதிகளில் குடியேற்றத்தை மேற்கொள்ள, தமிழ் மரபை, தமிழ் அடையாளத்தை அழித்து கலாசார இனவழிப்பை மேற்கொள்ள பெளத்த இடங்களை ஆய்தமாக்க சிங்கள பெளத்த பேரினவாதம் பாவிக்கிறது. பெளத்த இடத்தை அடையாளப்படுத்தல், காப்பாளரொருவராக சிங்களப் பிக்கு ஒருவரை நியமித்தல், இடத்தைப் பாதுகாப்பதற்கு சிங்கள இராணுவத்தை தரையிறக்கல் தொடர்ந்து சிங்கள விவசாயிகள் குடியேறுதல் என்பன சிறீலங்கா அரசால் மேற்கொள்ளப்படும் நிகழ்ச்சி நிரல் ஆகும். இந்த நிகழ்ச்சி நிரலே அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள குருந்தூர்மலையிலும் நிறைவேற்றப்பட்டிருந்தது.பெளத்தத்தை முன்னெடுப்பதற்கு சிறீலங்காவுக்கு 15 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை கடந்தாண்டு நவம்பரில் இந்திய அரசாங்கம் நன்கொடையாக வழங்கியிருந்தது. 1987 இந்திய – சிறீலங்கா ஒப்பந்தத்தில் அங்கீகரிக்கப்பட்ட தமிழர் தாயகத்தில் “பெளத்த தடங்களை அடையாளங்காண” அல்லது மீளமைப்பதற்கு இந்திய அரசாங்கத்தின் நன்கொடையானது பயன்படுத்தப்படமாட்டாதென உறுதிப்படுத்தும்படி இந்திய அரசாங்கத்தை நாங்கள் வேண்டுகிறோம்.சிறீலங்காவின் வடகிழக்கு பகுதி சிங்கள மயமாக்கலைத் தடுப்பது அறஞ்சார் கட்டாயம் மட்டுமின்றி, இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்குக் கட்டாயமும் ஆகும். பிரதமர் பணிமனை,நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.pmo@tgte.org-- Shanthini Sivaraman, Minister of Media, TGTE, 416-830-4305 media.team@tgte.org

தேர்தல் தாமதமாகும் அபாயம்

தேர்தல் முறைமை திருத்த யோசனைகள் உரிய முறையில் அமுல்படுத்தப்படாவிட்டால், தேர்தல் தாமதமாகும் அபாயம் உள்ளதாக பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் முறைமை திருத்தப்பட்டு எல்லை நிர்ணய பணிகள்...

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியாவிடமிருந்து நிதி

காங்கேசன்துறை துறைமுகத்தை முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கு 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா...

உக்ரைனின் ஓர்லிவ்கா கிராமத்தை கைப்பற்றியது ரஷ்யா

உக்ரைனின் ஓர்லிவ்கா (Orlivka) கிராமத்தை இராணுவம் கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள ஓர்லிவ்கா கிராமத்தை, ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள...

திரு உருத்தின் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 20.03.2024

யேர்மனி வூல்வன்பிற்நகரில் நகரில் வாழ்ந்து வரும் திரு. உருத்தின் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி ,பிள்ளைகள் ,பேரப்பிள்ளையுடனும் உற்றார் ,உறவுகளுடனும் கொண்டாடுகின்றார் இவர் சீரும் சிறப்புமாக...

நினைவுப் பேரிணைவு மாநாட்டுக்கான அழைப்பு.

நினைவுப் பேரிணைவு மாநாட்டுக்கான அழைப்பு.மேற்படி விடயம் தொடர்பாக, தமிழீழ விடுதலைக்கான போராட்ட செல்நெறியில் உணர்வுகளும், உறவுகளும் ஒன்றிக்கும் சமகால நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நினைவுப் பேரிணைவு மாநாட்டில்...

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில் உணவு தவிர்ப்பு போராட்டம்

இந்திய கடற்தொழிலாளர்களின்  அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட கடற்தொழிலாளர்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். யாழ் மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புக்களின்...

வெடுக்குநாறிமலையில் கைதான 08 பேரும் விடுதலை.

வெடுக்குநாறிமலையில்  கைது செய்யப்பட்ட எட்டுப்பேரும் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று வழிபாட்டில் ஈடுபட்டிருந்த வேளை,...

யாழுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி – பலாலியில் 278 ஏக்கர் காணிகளை கையளிக்க ஏற்பாடு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.  யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி பலாலியில் இராணுவ கட்டுப்பாட்டில் கடந்த 33 வருடங்களாக காணப்பட்ட 278...

வெடுக்குநாறியில் கைதானவர்களை விடுவிக்க கோரி நாளை யாழில் போராட்டம்

தமிழர் தாயகத்தில் தொல்லியல் என்ற போர்வையிலான பண்பாட்டு அழிப்பையும் சிங்கள - பௌத்தமயமாக்கலையும் உடன் நிறுத்துமாறு கோரியும், வெடுக்குநாறிமலை ஆலயத்தில் நெடுங்கேணிப் பொலிஸாரால் திட்டமிட்டுக் கைது செய்யப்பட்டவர்களை...

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக வடக்கில் 254 கோடி ரூபாய் மோசடி

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி வடமாகாணத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு  254 கோடி ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பில் 139 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என...

புடினுக்கு மாபெரும் வெற்றி: மீண்டும் அதிபரானார்!!

ரஷ்யாவில் நடைபெற்ற ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புடின் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார் என்பதை முடிவுகள் காட்டுகின்றன. 12 மணி நேர வேறுபாடுகளைக் கொண்ட ரஷ்ய நிலப்பரப்புக்குள்...

தமிழ் இளைஞர்களை எழுச்சி கொள்ள வைக்கும் வகையில் கருத்து கூறினார் என லலீசன் மீது குற்றச்சாட்டு

கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் அதிபர் ச. லலீசனுக்கு எதிராக புலனாய்வு துறையினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.  யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் 10ஆம்...

மீண்டும் கதிரைக்கு ஆசைப்படும் சுமா!

தமிழரசுக்கட்சி தலைமைக்கான போட்டியில் மீண்டும் போட்டியிடப்போவதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். முன்னதாக தலைமை தெரிவில் தோற்றமை உங்கள் அரசியல் வாழ்க்கைக்கு ஏற்பட்ட பின்னடைவாக கருதுகிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்...