Mai 8, 2024

வெடுக்குநாறியில் கைதான 08 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சிவராத்திரி தினத்தன்று வவுனியா வடக்கு வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்ற போது சப்பாத்துக் கால்களுடன் ஆலயத்திற்குள் நுழைந்த பொலிஸார் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர்.

குறித்த 8 பேரையும் வவுனியா நீதவான் நீதிமன்றில் நெடுங்கேணி பொலிஸார் கடந்த (09) மாலை முன்னிலைப்படுத்தினர். 

அதன் போது பொலிஸார் வழக்கு விசாரணைகள் இடம்பெறுவதால்  விளக்கமறியலில் வைக்குமாறு கோரியைதை அடுத்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது , மன்றில் 08 பேரும் முற்படுத்தப்பட்டதை அடுத்து இடம்பெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து 08 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது. 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert