Mai 8, 2024

இலங்கையர்கள் 06 பேர் கனடாவில் படுகொலை

கனடாவின் ஒட்டாவாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்து வந்த இலங்கை குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 

சம்பவத்தில் தாய் மற்றும் அவரது நான்கு பிள்ளைகள் மற்றும் வீட்டில் வசித்து வந்த 40 வயதுடைய ஆண் ஒருவர் உள்ளிட்ட 06 பேர் உயிரிழந்துள்ளனர். 

குழந்தைகளின் தந்தை பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நான்கு குழந்தைகளும் ஏழு வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கனடாவில் கல்வி கற்கும் 19 வயதுடைய ஃபேப்ரியோ டி சொய்சா என்ற இலங்கையர் என ஒட்டாவா பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

இந்தச் சம்பவம் முதலில் துப்பாக்கிச் சூடு என அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் ஆயுதமொன்றால் கொலைகள் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இச் சம்பவத்தில் நான்கு பிள்ளைகளின் தாயான 35 வயதுடைய தர்ஷனி பண்டாரநாயக்க அவரது பிள்ளைகளான 07 வயதுடைய இனுக விக்கிரமசிங்க , 4 வயதான அஸ்வினி விக்கிரமசிங்க 02 வயதான றின்யானா விக்கிரமசிங்க மற்றும் 02 மாதங்களான கெலீ விக்கிரமசிங்க ஆகியோரும் , அவர்களது வீட்டில் வசித்து வந்த 40 வயதுடைய காமினி அமரகோன் ஆகியோரே படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 

இந்த சம்பவத்தில் கொலையான நான்கு பிள்ளைகளின் தந்தையான தனுஷ்க விக்ரமசிங்க என்பவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert