Mai 2, 2024

சுவிசில் நடைபெற்ற லெப். கேணல் கௌசல்யன் ,மாமனிதர் சந்திரநேரு நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு!

விசில் நடைபெற்ற லெப். கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு 

அவர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு!

07.02.2005 அன்று வெலிகந்தைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத் துணைப்படையினரால் படுகொலை செய்யப்படட மட்டு. அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் ஆகியோரின்… 

19ஆம் ஆண்டு நினைவெழுச்சி நாள்-  சுவிஸ் 07.02.2024

07.02.2005 அன்று வெலிகந்தைப் பகுதியில் சிறிலங்காத் துணைப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட மட்டு. அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் ஆகியோரின் நினைவெழுச்சி நாளானது 07.02.2024 புதன் அன்று சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அலுவலகத்தில் அமைந்துள்ள லெப். கேணல் கௌசல்யன் கலைக்கூடத்தில் நினைவுகூரப்பட்டது.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வணக்க  நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன் மலர்மாலை அணிவித்தலைத் தொடர்ந்து ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் சுடர், மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

மாவீர வித்துகளின் நினைவுகள் சுமந்து நினைவுரை, மாவீரர் நினைவுப்பகிர்வும் இடம்பெற்றன. நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன. 

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert