Mai 3, 2024

விடுதலை புலிகள் மீதான தடையை நீக்குங்கள்: சபையில் தமிழ் எம்பி.

ஜேவிபி மீதான தடை எவ்வாறு நீக்கப்பட்டதோ அதேபோல் தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடையும் நீக்கப்படவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, ஒற்றை ஆட்சியை ஒழித்து தமிழ்த் தேசியம் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சமஷ்டி தீர்வை கொண்டுவர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, தமிழீழ விடுதலை புலிகள் என்ற பூச்சாண்டியை காட்டிக்கொண்டு ஒரு போதும் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert