Mai 19, 2024

15 கடற்றொழிலாளர் சங்கங்களுக்கு குளிர்சாதனப் பெட்டிகள் வழங்கி வைப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரால், 15 கடற்றொழிலாளர் சங்கங்களுக்கு குளிர்சாதனப் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. 

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பாஷையூர் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டே  குளிர்சாதனப்பெட்டிகளை வழங்கி வைத்தார்.

யாழ்ப்பாணத்திலுள்ள கடற்தொழிலாளர்களின் நலன்களுக்காக வடமாகாணத்தில் வணிக மற்றும் ஸ்திரமான மீன்பிடித்துறையை மேம்படுத்துவதற்காக விஞ்ஞானபூர்வமான வழிகளைப் பயன்படுத்துவதற்கான கலந்துரையாடல்களிலும் இந்தியா ஈடுபட்டுள்ளதாக தூதுவர் இங்கு குறிப்பிட்டார்.

இதன்போது யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் உள்ளிட்ட இந்திய தூதரக உயர் அதிகாரிகள் கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert