Mai 7, 2024

யாழில் தந்தை செல்வாவையும் விட்டுவைக்காத திருடர்கள்!

யாழில் தந்தை செல்வா சதுக்கத்தில் பொருத்தப்பட்டிருந்த இடி தாங்கி மற்றும் 80 அடி நீளமான இடி தாங்கிக்குரிய செப்பிலான இணைப்பு திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தந்தை செல்வா சதுக்கத்தில் நீண்ட காலமாக நீர் இறைக்கும் மோட்டர் திருட்டும் இடம் பெறுவதாக தந்தை செல்வா சதுக்க பராமரிப்பாளர்கள் கவலை வெளியிட்டுள்ளார்கள்.

இதேவேளை, 75 ஆயிரம் ரூபா பெறுமதியான நீர் இறைக்கும் மோட்டர்கள் 3 தடவைக்கு மேல் திருடப்பட்டுள்ளதாகவும், திருட்டு தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும் தொடந்து திருட்டு இடம்பெறுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.அதேவேளை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவுள்ள தந்தை செல்வா சதுக்க வளாகத்தில் திருட்டு சம்பவங்கள் இடம்பெறுவது வருத்தமளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert