Mai 2, 2024

அறுவைச் சிகிச்சை நிபுணர் இளம் செழிய பல்லவன் மீண்டும் யாழ் சென்றார்

விவேகம் நிறைந்தவரும் அற்புதமான அறுவைச் சிகிச்சை நிபுணர் என்ற பெயரை இலங்கையில் மட்டுமல்ல உலகெங்கும் பெற்றவருமான வைத்தியர் இளம்செழிய பல்லவன் மீண்டும் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றுள்ளார்.

மேற்படி அறுவைச் சிகிச்சை நிபுணர் வைத்தியர் இளம்செழிய பல்லவன் மீண்டும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றார். கடந்த செவ்வாய்க்கிழமை 22ம் திகதியே கொழும்புக்கு மாற்றப்படும் இடம்மாற்ற கடிதத்தைப் பெற்றார். எனினும் 24ம் திகதி வியாழக்கிழமை அந்த இடமாற்றம் இரத்து செய்யப்பெற்றது.

யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய போது கிளிநொச்சிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒரு கை துண்டாடப்பட்ட நிலையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட ஒரு நபருக்கு பிளாஸ்டிக் சத்திர சகிச்சை செய்து வெற்றிகரமாக துண்டாடப்பட்ட கையை பொருத்தியவர் இவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.