Mai 6, 2024

சமரவிக்ரம:மீண்டும் வெள்ளை வான் வருகிறது!

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் முன்னாள் ஊடகச் செயலாளர் சாமுதிதா சமரவிக்ரம கொலை அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுவது தொடர்பில் விசாரணைக்கு கோரிக்கை விடுகக்ப்பட்டுள்ளது

சாமுதிதா சமரவிக்ரமாவின் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் மற்றும் அவர் வாழும் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.

எனினும் சமரவிக்ரம தனக்குள்ள உயிருக்கு அச்சுறுத்தல்கள் குறித்து போலீசில் புகார் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

அவருக்கான உயிர் அச்சுறுத்தல் உண்மையாக இருந்தால், இந்த விஷயத்தில் உடனடி விசாரணையைத் தொடங்கவும், அவர் மிகவும் பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதால் அவரது வாழ்க்கையின் பாதுகாப்பை உறுதி செய்யவும் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.