Mai 6, 2024

அவர் ஐந்து தடவைகள் பிரதமர் ஆசனத்தை அலங்கரித்தார், ஆனால்…

1. கொழும்பு, கொள்ளுப்பிட்டி, 5 ஆம் ஒழுங்கையில் உள்ள தனது பாரம்பரிய இல்லத்தைக்கூட பெரிய அளவில் மறுசீரமைப்புச் செய்துகொள்ளவில்லை.. தனக்கென்று இருக்கும் அந்த ஒரேயொரு வீட்டையும் தனது மரணத்தின் பின்னர் தனது பாடசாலையான ரோயல் கல்லூரிக்கு அன்பளிப்புச் செய்து உயில் எழுதிக் கொடுத்து விட்டார்.
2. அவரது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் யார் யார் என்பதுகூடப் பொது மக்களுக்குப் பெரிதாகத் தெரியாது.. அவர்கள் எவரையுமே அரசாங்கப் பதவிகளில் ஒருபோதுமே இருத்தவில்லை. வாரிசுகளும் இல்லை, வாரிசுகளுக்காக பதினான்கு தலைமுறைகளுக்கு நாட்டைக் கொள்ளையடித்துச் சொத்துச் சேர்க்க வேண்டிய தேவையும் அவருக்கு இல்லை.
3. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த களனி விகாரை முழுக்க முழுக்க அவரது தாயாரின் அன்பளிப்புகள் மூலம் நிறுவப்பட்டது. அதன் நிர்வாக சபையில் நீண்ட காலம் பணியாற்றினார், பின்னர் அதிலிருந்து விரட்டவும் பட்டார். ஆனால் அந்த விகாரையையோ வேறெந்த விகாரைகளையோ அவர் ஒருபோதும் தனது அரசியலுக்குப் பயன்படுத்தவில்லை.
4. தொலைக்காட்சி மற்றும் கம்பியூட்டர்களை இந்த நாட்டுக்கு அறிமுகம் செய்ததில் அவர்தான் முன்னோடி. அவரது ஒரு சகோதரரே முதன்முதலாக ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தை ஆரம்பித்தார். அந்தத் தொலைக்காட்சியையோ அரசாங்கத்தின் தொலைக்காட்சிகளையோ ஒருபோதும் தனது அரசியலுக்குப் பயன்படுத்தியதில்லை. ஒரேயொரு தடவை அவர் நல்லாட்சி அரசாங்கத்தில் பிரபல ஊடகவியலாளர் சன்னஸ்கலவின் அழைப்பின் பேரில் கலந்துகொண்டார். அப்போது சன்னஸ்கல ‚உங்கள் குடும்பம்தான் தொலைக்காட்சியையே நாட்டுக்குத் தந்தது. அரசாங்கத் தொலைக்காட்சிக்குக் கூட நீங்கள் ஏன் இவ்வளவு காலத்தில் ஒரு தடவையேனும் வரவில்லை ?‘ எனக் கேட்டபோது, ஒரு புன்னகையோடு ‚என்னை யாரும் அழைக்கவில்லை‘ என்றுதான் பதிலளித்தார்.
5. தோல்வி மேல் தோல்விகள் வந்த போதிலும் ஒருபோதும் துவண்டு போகவில்லை, மக்களைக் கடிந்துகொள்ளவில்லை.
6. தனது அரசியலுக்காக ஒருபோதும் பெளத்த மதத்தையோ, சிங்கள இன உணர்வையோ, தேசப் பற்றையோ விலைகூறி விற்கவில்லை, வேஷம் போடவில்லை.
அந்த மகத்தான அரசியல் ஞானிதான் ரணில் விக்ரமசிங்க அவர்கள் !
Like

Comment
Share