Mai 8, 2024

கொழும்பு துறைமுகத்துக்கு அண்மையில் தீ

கொழும்பு துறைமுகத்துக்கு அண்மையில் தீ பற்றிய எம்.வி.எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பலின் கப்டன் உட்பட குழு உறுப்பினர்கள் 7 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகள் மற்றும் வாக்குமூலம் பதிவு செய்யும் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, குறித்த விசாரணை அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை கப்பலில் இன்று காலை எண்ணெய் கசிவோ அல்லது தீச்சுவாலைகளோ காணப்படவில்லை. சாம்பல்/வெள்ளை நிற புகை நடுப்பகுதியிலிருந்து தொடர்ந்து வெளியாகின்றது. எல்லைப்பரப்பினை குளிரூட்டும் பணி தொடர்கிறது என தீ அணைப்பு பணியில் ஈடுபட்ட இலங்கை இந்திய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.