Mai 10, 2024

வீர வணக்கம்..

ஆண்டவர்
வாழ்க்கையை
வரலாறும்
இதிகாசங்களும்
காட்சிகளாய்
பதிவாக்கியதை
பார்த்தோம்..
மாண்டவர்
உங்கள் வீர
வரலாற்றை
வாழும் போதே
பார்த்தவர் நாம்..
கூடவே
வாழ்ந்தவர் நாம்..
வீர வரலாற்றுக்கு
சாட்சியம் நாம்.
களமாடிய வீரத்தை
நிகழ்த்திய
தர்ம யுத்தத்தை
தரிசித்தவர் நாம்.
அஞ்சாத
நெஞ்சோடு
துஞ்சாத விழிகளோடு
எதிரிகளை
விரட்ட
வீரப் புலிகளானீர்..
விடியலுக்கான
விடை காண
புலிப்படையானீர்.
மானம் ஒன்றே
பெரிதன வாழ்ந்து
காவியமானீர்கள்..
கார்த்திகை
மாதம் மட்டுமல்ல
உங்கள் பாதம்
தொழும் பாக்கியம்
வாழும் காலம் யாவுமே..
வீர வணக்கம்
மாவீர ர்களே..
ஆக்கம் ரி..தயாநிதி