Mai 17, 2024

35வது கொரோனா மரணம்?

இலங்கையில் 35வது கொரோனா மரணம் அரங்கேறியுள்ளது. 78 வயதுடைய ஆண் ஒருவர் வைத்தியசாலைக்கு அனுமதிக்கும் போது உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மாரடைப்பால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது.மரணமடைந்தவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.