Mai 10, 2024

கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம்

கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களுக்கான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று காலை நடைபெற்றுள்ளது.

கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களுக்கான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று காலை நடைபெற்றுள்ளது.

தேசிய பொருளாதார அபிவிருத்திக்கு ஏற்ப கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான

அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் தேசிய திட்டத்துக்கு அமைச்சுகள், இராஜாங்க அமைச்சுக்களை உள்ளடக்கி 4

குழுக்கள் அமைக்கப்பட்டன.

1. சமூக உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு குழு

2. வாழ்வாதார மேம்பாட்டு குழு

3. உள்நாட்டு உற்பத்தி துறையை ஊக்குவிப்பதற்கான அபிவிருத்தி குழு

4. கிராமப்புற உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு குழு ஆகிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன

இதில் கிராமப்புற உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு குழுவின் கூட்டம் யாழ்ப்பாணம்-

கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கி இன்று இடம்பெற்றுள்ளது

நீர்ப்பாசனம் மற்றும் உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் இடர் முகாமைத்துவ

இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச, மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும, நெடுஞ்சாலைகள்

அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ ஆகியோர் உள்ளடங்களாக இராஜாங்க அமைச்சர்கள் இந்தக் குழுவில் உள்ளடக்கினற்னர்

இன்றைய கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரும் கடற்தொழில்

அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்

தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன், யாழ்ப்பாணம் – கிளிநொச்சி

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன்,

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

வடக்கு மாகாண ஆளுநரும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழு

இணைத் தலைவருமான பி.எம்.எஸ். சாள்ஸ் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்