Mai 10, 2024

மட்டக்களப்பு காத்தான்குடி வர்த்தக நிலையத்தில் பாரிய தீவிபத்தினால் கடை உரிமையாளர் படுகாயம்!

மட்டக்களப்பு காத்தான்குடி காவல்துறை பிரிவிற்குட்பட்ட பிரதான வீதியில் பலசரக்கு வர்த்தக நிலையமொன்றில் ஏற்பட்ட பாரிய தீவிபத்தினால் கடை உரிமையாளர் படுகாயமடைந்ததுடன் பல கோடி பெறுமதியான பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

குறித்த விபத்து இன்று (03) செவ்வாய்கிழமை காலை 10.00 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வர்த்தக நிலையத்தினுள் ஏற்பட்ட பாரிய தீயினைக் கட்டுப் படுத்த பாரிய முயற்சியினை மேற்கொண்ட போதிலும் சுமார் இரு மணி நேரத்திற்கும் அதிகமாக தீயைக் கட்டுப்பாட்டினுள் கெண்டுவர முடியாது பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையமான குறித்த வர்த்தக நிலையம் எரிவாயு முகவர் நிலையமுமாகும். இதனால் அயல்வாசிகள் தமது வீடுகளை விட்டு சில மணிநேரம் வெளியேறியதையும் அவதானிக்க முடிந்தது.

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதான பாதையை மூடிய காவல்துறையினர் போக்கு வரத்திற்கு மாற்று வழிகளைப் பயன்படுத்தினர்.