April 27, 2024

ஜந்து தங்கப்பதங்கங்களை பெற்ற குத்துச்சண்டை வீராங்கனை செல்வி யோகராசா நிதர்சனா!

தமிழருக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் இளம் குத்துச்சண்டைவீராங்கனை செல்வி யோகராசா தாயகத்தில் புதுக்குடியிருப்பை சேர்ந்தவர் இவர் தன் ஆளுமையால், மனத்துணிவால், தனித்துவம்கொண்டு குத்துச்சண்டையில் ஜந்து தங்கப்பதக்கத்தை வென்ற இவரை இனம்கானாத எம்மவர் எத்தனையோ,

இவர்தன் வாழ்வை பற்றியும், தான் எதற்காக குத்துச்சண்டையில் குதித்தார் என்பதையும் நாம் அறிந்து கொள்ளவேண்டிய காலம் இது

அவரின் தந்தை தாயைபிரிந்து மறுமணம் செய்தாலும் தனித்துவமாக இவருடன் இரண்டு சகோதரிகளை மிககஸ்ரமான சூலலில் வளர்து வந்துள்ளார்

அந்த நிலையில் தான் ஏதாவது சாதிக்கவேண்டும் என்று ஓர் மன ஓர்மத்தில் இவர் குத்துச்சண்டையில் தகமையுள்ள ஆசிரியரின்துணையுடன் பயிற்சிபெற்று இன்றுவரை இவர் ஜந்து தங்கப்பதங்கங்களை பெற்றுள்ளார் என்பது சிறப்பு அல்லவா?

இவர் வாழ்வை நிலை பற்றி அறியும் போது பணபலம் இல்லாமல், நல்ல உணவு உண்ணாமல் தனது உண்ணதநோக்துக்காய் முயன்ற பலன் இவரது வெற்றியாகும்!

ஓரு தங்கப்பதக்கப்பெற்றாலே அர்களைப்பாராட்டும் உலகு. பறைசாற்றும் ஊடகங்கள். அரசுகள், இவள் ஓர் தமிழிச்சி என்பதால் கண்டுகொள்ளவில்லை என்பதே உண்மை.

இவள் எங்களின்சொத்து
வரலாறு தந்த வன்னியாம்:
முல்லைமண்ணிண்
வீரம்பாய்த வீச்சுக்கொண்ட வீரங்கனை
தமிழினம் நிமிர்ந்து நிற்கும் என்பதை
பறைசாற்றும் இவள் வீரம்
இவள் எங்கள்ஈழமண்ணின் சொத்து இதை
நாம் அறிந்து இவளை
இவளில் இலச்சியத்தை உணர்ந்து
அவள் இலச்சியம் சிறக்க- நாம்
என்ன செய்வோம் என்று
நாங்கள் ஒவ்வெருவரும்
எம்மை நாமே கேட்டுக்கொள்வோம்
இவளின் ஆதங்கம்
நம்பிக்கை
தனக்கான கொள்கை
உணவல்ல வீரம்
மன உறுதியே வீரம் என்று
குத்துச்சண்டையில் களமாடும் இவள் வெற்றிகள் பெற்றும்
புகளாரம்கானாதவளானால்
காரனம் என்ன இவள் ஓர்
தமிழிச்சி என்பாதால் அல்லவா?
புலம்பல்கள் எதற்கு பெண்ணே
புலத்தில் உள்ளவர்
பலம் கிட்டும் என்றும்
பயம் ஏதும் வேண்டாம்
பாய்ந்திடு வேங்கையாய்
நீ களம் தனில் நீன்று .
வெற்றியுடன் விளையாடு
தடைவரும் நிமிர் மீண்டும்
ஓர்கனம் வீர வோங்கையாய்
தலை நிமிர்ந்து;

ஈழவன்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert