Mai 4, 2024

மேலும் பலருக்கு வலை வீச்சு?

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு எதிராக போராடிய நிலையில் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் தவத்திரு வேலன் சுவாமிகள் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் இலங்கை ஜனாதிபதி கலந்து கொண்ட போது யாழ். பல்கலை கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற எதிர்ப்பு போராட்டத்தின் போது, காவல்துறையினர் தடுப்புக்களை ஏற்படுத்தி இருந்தனர். எனினும் போராட்டகாரர்கள் காவல்துறையினரின் தடுப்புக்களை தாண்டி செல்ல முற்பட்டிருந்தனர். 

அதன் போது, காவல்துறை தண்ணீர் தாரை பிரயோகம் மேற்கொண்டர். அவ்வேளை காவல்துறையினரின் கடமைகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில்; விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றைய தினம் புதன் கிழமை யாழ்ப்பாண காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த தவத்திரு வேலன்சுவாமிகள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் உள்ளிட்ட பலரை விசாரணைக்கென அழைத்து கைது செய்வதற்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதும் மாணவ தலைவர்கள் விசாரணைகளை புறந்தள்ளியுள்ளனர்.

பொத்துவில்  தொடக்கம் பொலிகண்டி வரை பேரியக்கத்தின் முக்கிய செயற்பாட்டளராக விளங்கிய தவத்திரு வேலன் சுவாமிகள் கைது கவனத்தை ஈர்த்துள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert