Mai 4, 2024

துயர் பகிர்தல் திரு கனகசபாபதி சோமசேகரன்

திரு கனகசபாபதி சோமசேகரன்

facebook sharing buttonஇறப்பு – 25 OCT 2021

யாழ். மல்லாகம் நீலியம்பனையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கொழும்பு தெஹிவளையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபாபதி சோமசேகரன் அவர்கள் 25-10-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகசபாபதி, மகேஸ்வரி தம்பதிகளின் புதல்வரும், காலஞ்சென்ற நடராசா, சானுமதிதேவி தம்பதிகளின் மருமகனும்,

உருத்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

வித்தியலக்சுமி(லண்டன்), ரோகினி(லண்டன்), ஸ்ரீசத்தியசாயினி(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கனகேஸ்வரி, கௌரிதேவி மற்றும் தாமோதரம்பிள்ளை(ஓய்வுபெற்ற மொழி பெயர்ப்பாளர் இலங்கை பாராளுமன்றம்), பத்மாசனிதேவி(ஓய்வுபெற்ற ஆசிரியர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுரேஸ்(லண்டன்), காண்டீபன்(லண்டன்), ஸ்ரீஜெயன்(கொழும்பு கோல்டன் ரவர் பிரைவேற் லிமிரெட்) ஆகியோரின் மாமனாரும்,

அபி, ஆகாஷ், சந்தோஷ், அருஷ், ஸ்ரீநிகா, ஸ்ரீனுஜா ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 27-10-2021 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இல்லம் – குடும்பத்தினர்

Mobile : +94773557274