Mai 6, 2024

துயர் பகிர்தல் சுப்பிரமணியம் செல்லத்துரை (கலாபூஷணம் சைவப்புலவர்)

திரு. சுப்பிரமணியம் செல்லத்துரை (கலாபூஷணம் சைவப்புலவர்)

(இளவாலை மெய்கண்டான் மகாவித்தியாலய ஓய்வுபெற்ற அதிபர்)

தோற்றம்: 28 மார்ச் 1938 – மறைவு: 21 அக்டோபர் 2021

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் செல்லத்துரை அவர்கள் 21-10-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மாவிட்டபுரம் சின்னத்தம்பி சுப்பிரமணியம், இளவாலை சுப்பிரமணியம் பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் ஏக புதல்வரும்,

காலஞ்சென்ற சிவகாமசுந்தரி (இணுவில்- இளவாலை) அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற செல்லம்மா உலகநாதன் (வசாவிளான்), செல்வநாயகி சண்முகலிங்கம் (இணுவில்), செல்வமணி இராசேந்திரம் (இளவாலை) ஆகியோரின் சகோதரரும்,

நாவரசன் (லண்டன்), மாவிரதன் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுரேகா (லண்டன்), பிரகாஜினி (இலங்கை) ஆகியோரின் அன்பு மாமாவும்,

நிலான் (லண்டன்), சுகான் (லண்டன்), அட்சயா, சிவகர்சா, அபிலோசன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 22-10-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை அவரது இளவாலை இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, பி.ப 11:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை ஏழாலை இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, பின்னர் பி.ப 03:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெறும் அதனைத்தொடர்ந்து ஏழாலை உசத்தியோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- மைந்தர்கள்

கிரியை நடைபெறும் இடம்:-

வேலவளவு,

ஏழாலை மேற்கு,

சுன்னாகம்.

தொடர்புகளுக்கு:

நாவரசன் – மகன் Mobile: +44 798 526 9135
மாவிரதன் – மகன் Mobile: +94 77 386 7070