Mai 3, 2024

துயர் பகிர்தல் திரு இராமலிங்கம் தில்லைநாதன்

திரு இராமலிங்கம் தில்லைநாதன்

facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

பிறப்பு 01 JUN 1939 / இறப்பு 20 OCT 2021

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், நெடுங்கேணியை வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் தில்லைநாதன் அவர்கள் 20-10-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், வைத்திலிங்கம் பர்வதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பொன்னாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

சுமதி, பார்த்திபன்(சுவிஸ்), பாரதி(லண்டன்), கோமதி விக்கிரமன், பூமகள்(அவுஸ்திரேலியா), கோபிராம் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சத்தியவரதன், சர்வகர்மன்(லண்டன்), நவமேனன், நவசீலன்(அவுஸ்திரேலியா), தர்ஷினி(சுவிஸ்), ராஜீபா, ஜெயபிரதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சிவகுரு, செல்லத்துரை, செல்லத்தம்பி, இராசதுரை, வைத்திலிங்கம், செல்லம்மா, கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பகலவன், ஆதீசன், அக்சன், சீராளன், எழிழினி, சாதனன், யதுர்சன், தமிழினி, நிலவன், யாழினி, சாருஜன், வைஷ்ணவி, கிருஷ்ணவி, விசாலி. மதுஷா, தனுஜ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-10-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் அவரது வீட்டில் நடைபெற்று, பின்னர் நெடுங்கேணி சேனப்புலவு இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பார்த்திபன் – மகன்

Mobile : +41783254098