Mai 3, 2024

யாழ்ப்பாணம் குருநகரில் வாழ்வெட்டுடில் படுகாயம் அடைந்த இளைஞன் உயிர் இழப்பு !

யாழ்ப்பாணத்தில் நேற்று ( 22 ) இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார் . யாழ்ப்பாணம் குருநகரிலுள்ள திருச்சிலுவை சுகநல நிலையத்திற்கு அண்மையில் நேற்று வாள்வெட்டு சம்பவம் நடந்தது . குருநகரை நேர்ந்த இளைஞர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது . சில் குருநகருக்கும் அயலிலுள்ள இன்னொரு கிராம் இளைஞர் குழுக்களிற்கிடையிலான வரலாற்று பிரசித்தி பெற்ற மோதல் வரலாற்றின் தொடர்ச்சியாக இந்த வாள் வெட்டு நடந்ததா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரித்து வருகிறார்கள் . இந்த சம்பவத்தில் 3 இளைஞர்கள் காயமடைந்ததாக முன்னர் செய்தி வெளியான போதும் , 5 பேர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் . இதில் இருவர் படுகாயமடைந்திருந்தனர் . ஒருவர் உயிராபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார் . அந்த இளைஞன் இன்று உயிரிழந்தார் .