Mai 4, 2024

அரசு ஊழியர்களை வேலைக்கு அழைக்கும் தலிபான்கள்

ஆப்கானிஸ்தானை ன் முற்றும் முழுதாக தலீபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அரசு ஊழியர்களை பணிக்கு திரும்ப தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் விலகி கொண்ட நிலையில் தலீபான்கள் மொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றியுள்ளனர்.

இதன் காரணமாக அங்கு தங்கியிருந்த பிற நாட்டவர் உயிருக்கு ஆபத்து என்பதை தாண்டி ஆப்கானிஸ்தானிலேயே வசித்த தலீபான் எதிர்ப்பாளர்களுக்கும் உயிர் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் பல ஆப்கான் மக்களுமே நாட்டை விட்டு தப்பி செல்ல முயன்று வருகின்றனர்.

இந்நிலையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள தலீபான்கள், ஆப்கானிஸ்தானில் அரசு ஊழியர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுவதாகவும், அவர்கள் வழக்கம்போல அலுவலகங்களுக்கு சென்று பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.