Mai 18, 2024

போக்குவரத்தை முடக்க மீண்டும் கோரிக்கை!

அதிகளவான பயணிகளுடன் பயணிக்கும் பஸ்களில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முடியாது என்று இலங்கை வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டின் மக்கள் தொகையில் அதிக சதவீதத்தினர் முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளும்வரை அடுத்த இரண்டு மாதங்களுக்கு முடிந்தவரை பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுப் போக்குவரத்தின் போது பயணிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டியது அவசியம்.

முகக்கவசங்களை அணிந்திருத்தல், சமூக இடைவெளியைப் பேணுவது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.