Oktober 23, 2024

கிளியில் சுவர் இடிந்து சிறுவன் பலி!

தொடரும் மழையின் மத்தியில் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் 08 வயது சிறுவன் பலியாகியுள்ளான். கிளிநொச்சி தொண்டமான் நகரில் இப்பரிதாபம் அரங்கேறியுள்ளது.

இன்று காலை இடம்பெற்ற சம்பவத்தினால் அப்பகுதியில் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.

வடக்கிற்கு வந்த வீடமைப்பு திட்டங்களை திருப்பி அனுப்பிய கூட்டமைப்பினரது செயற்பாடு காரணமாக வடகிழக்கில் இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகள் இன்றியே வாழ்ந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.