Mai 11, 2024

ரிஷாத் தலைமறைவாகி உள்ளார்

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுனை கைது செய்வதற்காக தேடுதல் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.  எனினும் அவர் தொடர்ந்தும் தலைமறைவாகி உள்ளார்.

48 மணி நேரம் கடந்துள்ள நிலையிலும்  அவரை கைது செய்ய முடியவில்லை. ரிஷாத் பதியுதீனை தேடி கொழும்பின் கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவு உட்பட வெள்ளவத்தை, மன்னார் பகுதிகளிலும் விஷேட தேடுத்ல்கள் நடாத்தப்பட்ட போதும் அவரைக் கைது செய்ய முடியவில்லை. அத்துடன் அவருடன் நீண்டகாலமாக இடம்பெயர்ந்தோரை மீளக் குடியமர்த்துவதற்கான திட்டத்தின் பணிப்பாளர்   சம்சுதீன் முகமது  யசீனையும் கைது செய்ய  முடியவில்லை.