Mai 11, 2024

பொலிஸ் விசேட அதிரடிப்படை வீட்டிலிருந்த 3 வாள்களை மீட்டதுடன், இளைஞன் ஒருவனை கைது செய்துள்ளது.

யாழ்.திருநெல்வேலி – பால்பண்ணை வீதியில் வீடொன்றை முற்றுகையிட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படை வீட்டிலிருந்த 3 வாள்களை மீட்டதுடன், இளைஞன் ஒருவனை கைது செய்துள்ளது.

குறித்த வீட்டில் வாள்கள் மறைத்துவைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த முற்றுகை இடம்பெற்றிருக்கின்றது.

இதன்போது வீட்டில் இருந்த 21 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான். மேலும் மீட்கப்பட்ட வாள்கள் புதிய வாள்கள் என கூறப்படுகின்றது.